2021 நிகழ்வுகள்:

19, December 2021
கூட்டு வழிபாடு
பாரீஸ் நகருக்கு அருகில் Nanterre நகரில் காலை 10மணி முதல் மதியம் 3மணி வரை..
☀️ திருஅருட்பா பாடல் வழிபாடு
☀️ சத்விசாரம் மற்றும் சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
🍃வருகை புரிந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி விழா இனிதே நடைபெற்றது.
9,October 2021
வள்ளலார்-199* ஆம் *தனிப்பெருங்கருணை நாள்*
பாரீஸ் நகருக்கு அருகில் Nanterre நகரில் காலை 10மணி முதல் மதியம் 3மணி வரை..
☀️ திருஅருட்பா பாடல் வழிபாடு
☀️ சத்விசாரம் மற்றும் சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
🍃வருகை புரிந்த அனைவருக்கும் மதிய உணவு வாழை இலையில் வழங்கி விழா இனிதே நடைபெற்றது.
5, October 2021
தனிப்பெருங்கருணை நாள் கூட்டு வழிபாடு
 
☀️ திருஅருட்பா பாடல் வழிபாடு
☀️ சத்விசாரம் மற்றும் சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
🍃வருகை புரிந்த அனைவருக்கும் மதிய உணவு வாழை இலையில் வழங்கி விழா இனிதே நடைபெற்றது.
5, October 2021
தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தமிழகம் தன் மகத்துவம் அறிய ஆரம்பித்துவிட்டது.
தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சன்மார்க்க பணியில்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் -பிரான்ஸ்
21, September 2021
*திருஅருட்பிரகாச வள்ளலார் 199- வது* *வருவிக்கவுற்ற திருநாள்* நிகழ்வை முன்னிட்டு நன்கொடை வழங்கப்பட்டது
வள்ளல் வழியே வாழ்வின் ஒளி என்று போற்றி ஆதரவுயில்லா வறுமையால் வாடும் நம் உறவுகளின் பசிப்பிணி நீக்க நாள் தோறும் *100 *நபர்களுக்கு* ( *சன்மார்க்க சங்கம் அரியநகர்-புதுச்சேரி** )மேல் உணவளிக்கும் உயரிய பணி மேலும் சிறக்க அவர்களின் முயற்சிக்கு நமது *வள்ளலார் அருள் ஜோதி மணி மன்றம்-பிரான்ஸ்* *1 லட்சம் ரூபாய்* இறையருள் துணையால் பங்கு கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுகிறது.
உயிர்காக்கும் நற்செயலுக்கு பொருள் உதவி அளித்த தயவாளர்களை பிரான்ஸ் சன்மார்க்க சங்கம் வணங்கி போற்றுகிறது
4, September 2021
கூட்டு வழிபாடு - 5 வயது மழலையின் அற்புதம்
பாரீஸ் நகருக்கு அருகில் Nanterre நகரில் காலை 10மணி முதல் மதியம் 3மணி வரை..
☀️ திருஅருட்பா பாடல் வழிபாடு
☀️ சத்விசாரம் மற்றும் சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
🙏 விழாவில் 5-வயது குழந்தை விவேகன் பாடிய திருஅருட்பா பாடல்கள் அனைவரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.இக்குழந்தை வாழ்வில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று சிறக்கவும் , காரணமாக ‌உள்ள பெற்றோர் நலம் பல பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம். 🙏
20, June 2021
கூட்டு வழிபாடு
 
🔥 கடந்த ஓர் ஆண்டுக்களாய் கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட தடைகளால் நமது சன்மார்க்க வழிபாடுகள் ‌ பொது இடத்தில் நடைபெறாது இருந்தது, இன்று சன்மார்க்க வழிபாடு வள்ளலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இடம் (Salle de maison quartier Berthelot 02, allée Colonel Fabien
92000 Nanterre)
🔥 பாரிஸ் வாழ் இலங்கை தமிழ் உறவுகளால் சிறக்கிறது சன்மார்க்க பணிகள்.
🔥காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை அகவல் பாராயணம் , திருவருட்பா இசை‌ நிகழ்வு மற்றும் சத்விசாரம் பொன்ற அற்புதமான நிகழ்வுகள்.உலக உயிர்கள் இன்புற்று வாழ கூட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
🔥 ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் பிரான்ஸ் சன்மார்க்க சங்கம் செயல்படுகிறது.
11, May 2021
இலங்கை தமிழர்களுக்கு ஜீவகாருண்யம், பொருளுதவி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் இலங்கை தமிழர்கள் காப்பகத்தில் உள்ள அன்பர்களுக்கு.....🙏
பிரான்ஸ் வள்ளலார் அருள் ஜோதி மணிமன்றத்தினர் பொருளுதவி மற்றும் ஏற்பாடுகள் செய்து...🙏
உயிர் இரக்கம் அறக்கட்டளை, புதுச்சேரி. மற்றும்,திருஅருட்பா ஆ,,பாலகிருஷ்ணா பிள்ளை நினைவு அறக்கட்டளை 🙏
அவர்களின் துணை கொண்டு மே-11ந் தேதி 2021, தர்மபுரி மாவட்டம், தும்பல அள்ளி பகுதியில் முகாமில் குடியேரி வசித்துவரும் நமது உறவுகளான இலங்கை தமிழர் 230 குடும்பங்களுக்கு கோதுமை மற்றும் மளிகை பொருட்கள் 🙏
பிரான்ஸ் வள்ளலார் அருள்ஜோதி மணிமன்றத்தில்,உள்ள சன்மார்க்க அன்பர்கள் வழங்கினர்,🙏
இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய புதுச்சேரி- உயிர் இரக்கம் அறக்கட்டளை மற்றும்
திருஅருட்பா ஆ,,பாலகிருஷ்ணா பிள்ளை நினைவு அறக்கட்டளைக்கு ..
🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🙏🙏
பிரான்ஸ் வள்ளலார் அருள் ஜோதி மணி மன்றம் ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது..
30, January 2021
வியோமன்(வியோமஜோதி) கலந்துரையாடல்

திரு இரா.அறிவழகன் - வனிதா அவர்களின் மகன் வியோமன்(வியோமஜோதி) அவர்கள் (12வயது) வள்ளலின் அருளால் அவர் அளித்த சன்மார்க்க நெறிகளை பிரெஞ்சு மொழியில் உலகம் முழுதும் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடல் செய்தார்.

2020 நிகழ்வுகள்:

28,July 2020
கூட்டு வழிபாடு

பாரிஸ் நகரில் சன்மார்க்க கூட்டு வழிபாடு இலங்கை ‌தமிழ் உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது.

எங்களின் ஆன்மநேய சகோதர உறவான
🔥 தயவு மகேந்திரன் ஐயா🔥 அவர்களின் ஆத்மா இறையருளால் நன்மை பெற்று பிறப்பின் முழுமை அடைய வழிபாடு நடைபெற்றது.
14,March 2020
கூட்டு வழிபாடு
இயற்கை விளக்க உண்மை நிறைவான இறைவன் கடந்த சனிக்கிழமை அன்று பாரீஸ் நகரில் சன்மார்க்க இல்லத்தில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ ஓர் அற்புத வழிபாட்டு நிகழ்வை நடத்தினார்கள்.
சென்னையில் இருந்து வருகை புரிந்த சித்த மருத்துவ நிபுணர் சன்மார்க்க நெறியாளர் ஹசேன் ஐயா கலந்து கொண்டு திரு அருட்பா ஞான சரியை பாடல் விளக்க சத்விசார நிகழ்வு செய்தார்கள்.
உலக உயிர்கள் நலம் பெற இறைவன் அளித்த நன்னெறி இவ்வுலகில் ஓங்கி சிறப்பாக வாழ இறை விண்ணப்பம் செய்து நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
March 30
சன்மார்க்க தைப்பூசத் திருநாள்
ஆண்டவரின்.அருளால் ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்ற சன்மார்க்க தைப்பூசத் திருநாள் நிகழ்ச்சிகள்.
இந்த நிகழ்வு பிரான்சில் உள்ள இலங்கைத் தமிழ் உறவுகளை கொண்டு வள்ளலார் நிகழ்த்தினார்.
பள்ளி சிறார்கள் கலந்து கொண்டு சன்மார்க்க நெறி அறிந்தனர், மதிய உணவு அளித்து சத்விசார நிகழ்வோடு இனிதே நிறைவு பெற்றது.

2019 நிகழ்வுகள்:

15,December 2019
கூட்டு வழிபாடு மற்றும் சத்சங்கம் .
ஐரோப்பா கண்டத்தில் பாரிஸ் நகரத்தில் வள்ளலின் தலைமையில் சிறப்பாக ஓங்கி வருகிறது .
இலங்கை தேசத்து சகோதர உறவுகளின் சன்மார்க்க ஆர்வமே இன்றைய பாரிஸ்நகரில் சன்மார்க்க வளர்ச்சி .
15/12/2019 அன்று பூச திருநாளில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்ட நேரத்திலும் இறையருளால் நடைபெற்ற சன்மார்க்க ஒளிநெறி கூட்டு வழிபாடு மற்றும் சத்சங்கம் .
மாயை சூழுலகில் மரணம் பெருகும் காலத்தில் உலக உயிர்கள் இன்புற்று வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி நிகழ்வு வள்ளலின் தலைமையில் நடைபெற்றது .
25,July 2019
பிரெஞ்சு மொழியில் சனமார்க்க நூல்கள்.
அறிவு திருகோவிலில் ஆண்டவரின் அருளால் வள்ளலின் வரிகள் பிரெஞ்சு மொழியில் அளித்த நன்னாள் இனி அங்கு உள்ள நூலகத்தில் பிரெஞ்சு மொழியில் சனமார்க்க நூல்கள்.
வேதாத்திரி மகரிஷீ பெற்ற அருட்செய்திகள் வள்ளலார் அளித்த சன்மார்க்க பேருண்மைகளே , வள்ளலை மானசீக குருவாக கொண்டு அவரின் அருட்பயணம் தொடந்துள்ளது .
பலமுறை சென்றாலும் இம்முறை சிறப்பு பெற்றது .ஆன்மீக சமுதாயம் மலர இவ்வமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆண்டவரின் அருளால் சிறந்து ஓங்கட்டும்.
பிரான்ஸ் சனமார்க்க சங்கத்தின் சார்பாக எங்களின் அன்பு வணங்கங்களை அளித்து மகிழ்கிறோம் .
22,July 2019
www.vallalareurope.org என்ற இணையதளம் அமைப்பு பற்றி கலந்துரையாடல் செய்த தருணம்
23,June 2019
ஓர் அம்மன் ஆலையத்தில் சன்மார்க்க நிகழ்வு .
பேரிஸ் நகருக்கு அருகில் ஓர் அம்மன் ஆலையத்தில் நடந்த சனமாரக்க நிகழ்வு .
காண்போர் காணும் இடம் ,கேட்போர் கேட்கும் ,நுகர்வோர் நுகரும் இடம் என்று எங்கும் நிறைந்த பரம் பொருள் அருளால் நிகழ்வு சிறந்தது .
நமது சென்னை சன்மார்க்க சான்றோர் சித்த மருத்துவர் எம்.ஏ. ஹுஸைன் ஐயா அவர்களின் பங்களிப்பே நிகழ்வின் சிறப்பு.
 
 
14,April 2019
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் திருஅருட்பா இசை நிகழ்ச்சி..
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் திருஅருட்பா இசை நிகழ்ச்சி..
புதுவை அருட்பா அமுது அ. அன்னபூரணி அம்மா அவர்களின் சிறப்பான திருஅருட்பா இசை நிகழ்வு.
இந்நிகழ்வை இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ் மற்றும் அருள்ஜோதி வள்ளலார் மணிமன்றம் பிரான்ஸ் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறது.
25,March 2019
சன்மார்க்க பெறுநெறிகள் பிரஞ்சு மொழியில் நூல் வெளியீட்டு விழா.
பாரீஸில் நடந்த வள்ளலார் அளித்த சன்மார்க்க பெறுநெறிகள் பிரஞ்சு மொழியில் நூல் வெளியீட்டு விழா.
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்ற வள்ளலார் திருவார்த்தையின் படி சிறந்து ஓங்கும் சன்மார்க்க நிகழ்வுகள்.
ஐரோப்பியர்களுக்கு கிடைத்த பெரும் பேறு இந்த நூல் இந்த வரலாற்று நிகழ்வுகளை இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ் மற்றும் அருள்ஜோதி வள்ளலார் மணிமன்றம் பிரான்ஸ் ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெற்றது.
10,Feburavary 2019
பிரான்ஸ் நாட்டில் நடந்த சன்மார்க்க நிகழ்வு..
ரான்ஸ் நாட்டில் நடந்த சன்மார்க்க நிகழ்வு..
இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் பங்கு கொண்டு சன்மார்க்கம் விழைகிறார்கள்.
தமிழகம் கண்ட ஆத்ம ஞானி வள்ளலார் பாரத தமிழர்களுக்கு எட்டாத கனியாகவே இங்கு உள்ளது..
காரணம்?????? மாயையின் ஆட்சி.. இது மாறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.. நன்றி ஆண்டவரே எம்மை தனிமையில் இருந்து விடுவித்த தனிப்பெருங்கருணைக்கு...
27,January 2019
பிரான்ஸ் நாட்டில் நடந்த 148 வது தைப்பூச திருவிழா காட்சிகள்..
பிரான்ஸ் நாட்டில் நடந்த 148 வது தைப்பூச திருவிழா காட்சிகள்..
இயற்கையின் ஆற்றல் 3°c வெப்பநிலையில் ஆண்டவரின் அருளால் அன்பர்கள் சூழ வள்ளலார் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. அகவல் பாராயணம் திருஅருட்பா வழிபாட்டு பாடல்கள் மற்றும் சத்விசார நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறியது.
இந்த நிகழ்வை இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ் மற்றும் அருள்ஜோதி வள்ளலார் மணிமன்றம் பிரான்ஸ் இணைந்து நடத்தியது.

2018 நிகழ்வுகள்:

16,December 2018
சன்மார்க்க வழிபாட்டு நிகழ்வுகள்.
பிரான்ஸ் வாழ் நமது சகோதர உறவுகளான இலங்கை வாழ் தமிழ்ன்பர்களால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்டவரின் அருளால்
உருவாக்கப்பட் அருள்ஜோதி வள்ளலார் மணிமன்றம் பிரான்ஸ் மற்றும் இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ் இணைந்து சன்மார்க்க வழிபாட்டு நிகழ்வுகள்.
18,November 2018
சத்விசார நிகழ்வு.

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற சன்மார்க்க நிகழ்வில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் நடைபெற்ற சத்விசார நிகழ்வு.

7,October 2018
பாரீஸ் நகரில் நடைபெறும் நமது அருட்தந்தை வள்ளலின் 196 வது அவதார திருநாள்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் பாரீஸ் நகரில் நடைபெறும் நமது அருட்தந்தை வள்ளலின் 196 வது அவதார திருநாள் கருத்தரங்கில் வள்ளலின் நெறியின்படி மதிய உணவு வழங்கப்பட்டது.
1)சீரக சம்பா உடன் சீரகம் கலந்த சாதம்
2) முழு பச்சைப் பயறு அவியல்
3)நாட்டு கத்தரிக்காய் பொறியல்
4) நாட்டு சர்க்கரையால் தயாரிக்கப்பட இனிப்பு.
5) ஞான மூலிகை கசாயம் மற்றும் சீரக குடி தண்ணீர்
ஐரோப்பிய நாட்டவர் விரும்பிய வள்ளலின் அருள் நிறைந்த சாத்வீக உணவை உண்டு தற்போது கருத்தரங்கம் நடந்து கொண்டு உள்ளது.
23,September 2018
கூட்டு வழிபாடு

இராமலிங்கர் பணி மன்றம் பிரான்ஸ்-

கூட்டு வழிபாட்டின் திருக்காட்சிகள்.
சன்மார்க்க வாழ்வின் நித்திய என்ற சாதாரன உலக ஒழுக்க விதி பற்றி சத்விசாரம் மற்றும் திருஅருட்பா வழிபாடு இதில் சங்க தலைவர் திரு அலன் மற்றும் இலங்கை தமிழ் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
திரு அறிவழகன் அவர்களின் இல்லத்தில் வள்ளலின் அருளால் சிறப்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.
17,September 2018
முதல் முறையாக ஓர் ஐரோபியரை கொண்டு சன்மார்க்க கருத்தரங்கம்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் ஐரோப்பாவில் பிரான்ஸ் தேசத்தில் முதல் முறையாக ஓர் ஐரோபியரை கொண்டு சன்மார்க்க கருத்தரங்கம் வள்ளலின் அருளால் சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்வில் பெரும்பாலோர் ஐரோப்பிய தேசத்தவர், மூன்று மணி நேரம் நடந்த நிகழ்வு நாளைய சன்மார்க்க தேசத்திற்கு தொடக்கமாக அமைந்தது.
பிரான்ஸ் சன்மார்க்க சங்கத்தின் தலைவர் அருள்திரு அலன் அவர்கள் பிரஞ்சு மொழியில் நிகழ்வை நடத்தினார்.
வள்ளலாரின் சன்மார்க்க சிந்தனைகளை எடுத்துரைக்க அன்பர்களின் விசாரத்தில் சன்மார்க்கத்தின் மரணம் இல்லா பெருவாழ்வு பற்றிய விளக்கம் அளித்து இறுதியில் மகாமந்திர கூட்டு பிரார்த்தனை செய்து நிகழ்வு ஆண்டவரின் அருளால் இனிதே நிறைவுற்றது. (நேரம் இரவு 11மணி 30 நிமிடம்.)
29,July 2018
வள்ளலார் அருள்ஜோதி மணிமன்றம் உதயமானது
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் வள்ளலார் தலைமையில் நேற்று பாரீஸ் நகரில் இலங்கை தமிழ் அன்பர்களின் சன்மார்க்க உணர்வால் ஓர் சன்மார்க்க சங்கம் உதயமாகிறது..
**வள்ளலார் அருள்ஜோதி மணிமன்றம் **
என்ற பெயரில் வள்ளலின் கருணையால் தொடங்கியது, இதன் முக்கிய பணியாக பாரீஸ் வாழ் இலங்கை தமிழர்கள் சன்மார்க்க நெறி அறிந்து உயர்வடைய இச்சங்கம் செயல்பட்டு சிறந்து ஓங்கும்..