எங்களை பற்றி
வள்ளலார் அருட்ஜோதி மணிமன்றம் பிரான்ஸ்
பிரான்ஸ் அரசியல் சட்டம் 1901 கீழ் அமைக்கப்பட்ட இராமலிங்க மிஷன் பிரான்ஸ் சங்கம் ஓர் மத சார்பற்ற மற்றும் லாபநோக்கற்ற அமைப்பு ஆகும். இது மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொது சேவை மையம். இந்த அமைப்பு எல்லா உயிரினங்களுக்கும் கருணை மனப்பான்மையில் வழங்கப்படும். சேவையை இராமலிங்க வள்ளலார் அருளிய உலகளாவிய போதனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் மதங்கள், சாதிகள், நம்பிக்கைகள், நிறங்கள் மற்றும் மொழிகள் போன்ற எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்ட அனைத்து மனிதர்களுக்காகவும் திறந்திருக்கும் ஒர் பொது அமைப்பு இவ் இராமலிங்க மிஷன் பிரான்சின் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் மூலம் இலவச தினசரி உணவு விநியோகம், இலவச மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆடை விநியோகம், போர்வைகள் போன்றவற்றை இலவசமாக விநியோகித்தல். தமிழ், பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழிகளின் போதனை உட்ப தியானம் மற்றும் அறநெறிமுறை போன்ற ஆன்மீக போதனைகளை போன்றவை கற்பிக்கப்படும்.
இராமலிங்க வள்ளலார் அளித இந்த நெறிகள் நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் இறை உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்து சன்மார்க்க நெரியின் முடிவாகிய மரணம் இல்லா பெருவாழ்வை அடைய வழிசெய்தலாகும்.
இந்த அமைப்பு தயவுள்ளம் கொண்டவர்களின் நன்கொடைகளை ஏற்று பிரான்சு, ஐரோப்பா இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்திலும் இருக்கக் கூடிய சன்மார்க்க சங்கங்களை சிறப்பாக நடத்துவதற்கு இயன்றளவில் இச்சங்கம் முயற்சி செய்யும் , உலக மக்களிடையே கருணை அன்பு இரக்கம் மற்றும் உண்மை தூய்மை போன்ற மிக உயர்ந்த நெறிகளை பரப்பவும் வளர்க்கவும் நமது இராமலிங்க மிஷன் பிரான்ஸ் பாடுபடும்.

வள்ளலார் அருட்ஜோதி மணிமன்றம் பிரான்ஸ்(சின்னம்)
வள்ளலார் அருட்ஜோதி மணிமன்றம் பிரான்ஸின் எதிர்கால திட்டங்கள்:
1. நாள் ஒன்றுக்கு 1 யூரோ பங்களித்து செய்யும் ஜீவகாருண்ய உயிர்காக்கும் திட்டம் (அனவரையும் ஜீவகாருண்ய சேவை செய்ய ஊக்குவித்தல்).
2. தமிழகம் மற்றும் இவ்வுலகில் துன்பத்தில் வாடும் சன்மார்க்கிகளை காக்கும் “சன்மார்க்கிகள் பாதுகாப்பும் மையம்” (அடிப்படை வழ்வியல் தேவைகளை நிறைவு செய்தல்)
3. ஐரோப்பிய வாழ் மக்களுக்கு சன்மார்க்க நெறிகளை அளித்து வடலூர் பெருவெளியோடு தொடர்பை ஏற்படுத்துதல்